அதிராம்பட்டினம், அக்.19
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர், கட்சியில் புதிதாக இணைந்த அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் மு.நூ காதர் முகைதீன், எம். முகமது இக்பால், எம்.அப்துல் ஜலீல் ஆகியோருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதையின் எஞ்சிய பட்டுக்கோட்டை ~ திருவாரூர் பணிகளை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்குவதற்கு ரயில்வே துறையைக் கேட்டுக்கொள்வது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவலை தடுக்கும் விதத்தில், நோய் தடுப்பு போன்ற முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் துணைச்செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார். இதில், முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ. முனாப், பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர், கட்சியில் புதிதாக இணைந்த அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் மு.நூ காதர் முகைதீன், எம். முகமது இக்பால், எம்.அப்துல் ஜலீல் ஆகியோருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதையின் எஞ்சிய பட்டுக்கோட்டை ~ திருவாரூர் பணிகளை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்குவதற்கு ரயில்வே துறையைக் கேட்டுக்கொள்வது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவலை தடுக்கும் விதத்தில், நோய் தடுப்பு போன்ற முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் துணைச்செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார். இதில், முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.