அதிராம்பட்டினம், அக். 26
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், தஞ்சை கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தஞ்சை கேன்சர் சென்டர் மருத்துவர் டாக்டர் எச். அப்துல் ஹக்கீம் தலைமையில், சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் எஸ்.செல்வகுமார், டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் கெளசல்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்துகொண்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இரத்தத்தின் சர்க்கரை அளவு, உடல் எடை, இரத்த அழுத்தம், இசிஜி, புற்றுநோய் கண்டறியும் திசுப்பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். இதில், 6 பேருக்கு புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டறியப்பட்டு, நோயாளிகளுக்கு தஞ்சை கேன்சர் சென்டரில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில், தஞ்சை கேன்சர் சென்டர் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜி.மணிகண்டன், மாவட்டத்தலைவர் எம். அகமது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சாகுல்ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க துணைத் தலைவர் பி.பிச்சை முத்து, இணைச்செயலாளர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், தஞ்சை கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தஞ்சை கேன்சர் சென்டர் மருத்துவர் டாக்டர் எச். அப்துல் ஹக்கீம் தலைமையில், சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் எஸ்.செல்வகுமார், டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் கெளசல்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்துகொண்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இரத்தத்தின் சர்க்கரை அளவு, உடல் எடை, இரத்த அழுத்தம், இசிஜி, புற்றுநோய் கண்டறியும் திசுப்பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். இதில், 6 பேருக்கு புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டறியப்பட்டு, நோயாளிகளுக்கு தஞ்சை கேன்சர் சென்டரில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில், தஞ்சை கேன்சர் சென்டர் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜி.மணிகண்டன், மாவட்டத்தலைவர் எம். அகமது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சாகுல்ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க துணைத் தலைவர் பி.பிச்சை முத்து, இணைச்செயலாளர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.