தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் ரஹ்மான். ஆட்டோ ஓட்டுனர். இவர் கடந்த அக்.24 ந் தேதி மனைவி ஆய்ஷா (வயது 23), தனது 8 வயது பெண் குழந்தை ஆகியோருடன் ஆட்டோ வாகனத்தில் அதிரையிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மணமேல்குடி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆயிஷாவின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனரால், தனது மனைவியின் கால் ஆப்ரேஷன் ~ தொடர் சிகிச்சை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத நிலையில் பெண்ணின் குடும்பத்தார் நம்மிடையே உதவியை கோரி இருந்தனர்.
இந்நிலையில், அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ஏற்பாட்டின் பேரில், ரியாத் வாழ் அதிரை சகோதரர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆகக் கூடுதல் ரூ. 55 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை, பெண்ணின் குடும்பத்தாரிடம் இன்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அருகில், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மருத்துவ நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் கொடையளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.
பைத்துல்மால் நிர்வாகிகள், மற்றும் ரியாத் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி கலந்த துவாவை ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்யவேண்டும்
ReplyDeleteயா அல்லாஹ் அதிரை பைத்துல்மால் கியாமத் நாள்வரை நீடித்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய உதவிசெய்வாயாக ஆமின்.
வாழ்த்துக்களுடன்,சாகுல்ஹமிது