.

Pages

Friday, October 19, 2018

திருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழைப்புப் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.19
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், திருச்சியில் அக். 21 ஆம் தேதி
ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், சுமார் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துச்செல்ல தீர்மானித்து உள்ளனர்.

இதையொட்டி, அக்கட்சியின் சார்பில், அதிரை பேரூர் பகுதிகளில் ஆட்டோ வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பிராச்சாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமையில், அதிரை பேரூர் பகுதிகளின் அரசியல் கட்சி நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு மாநாடு அழைப்பிதழை நேரில் சந்தித்து வழங்கி வருகின்றனர். இதில், பி.எப்.ஐ தஞ்சை மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.