.

Pages

Tuesday, October 23, 2018

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக 30 தமிழ் பதிப்பகங்கள்!

அதிரை நியூஸ்: அக். 23
ஷார்ஜாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை 37வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் எதிர்வரும் அக்டோபர் 31 துவங்கி நவம்பர் 10 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் பல சர்வதேச மொழிகளில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த வருடப் புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 30 தமிழ் பதிப்பகங்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புக்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளன.

இந்த கண்காட்சியின் போது பிரபல தமிழ் பதிப்பகத்தார்கள், சிறப்பு பேச்சாளர்கள், திருமதி கனிமொழி உள்ளிட்ட பிரபல்யமான சில அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கடந்த வருட ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் திமுக தலைவர் திரு ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

செய்தித் தொகுப்பு: அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.