.

Pages

Thursday, October 25, 2018

குர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 25
குர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்படும்.

அதன்படி, அரபி மொழி பாடப்பிரிவில், குர்ஆன் ஜூஸ் மனனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள் எம்.ஒய் முத்தஸ்ஸிர், எம்.என். சாதிர் அகமது, ஜி. முகமது தவ்பீக், எஸ்.முகமது, எஸ்.ஹவாஸ், ஏ.ஜபீர், எஸ். முகமது ஜமீல் ஆகியோருக்கு இன்று (அக்.25)  வியாழக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில், நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், மாணவன் எம்.ஒய் முத்தஸ்ஸிர் வகுப்பு தொடங்கிய குறுகிய நாட்களில் குர்ஆன் ஒரு ஜூஸ் மனனப்போட்டியில் வெற்றி பெற்றதற்கான சிறப்பு பரிசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்கு, பள்ளி இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி போட்டி நடுவராக இருந்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில், டெங்கு மற்றும் மழை காலங்களில் பரவும் தொற்றுநோய் தடுப்பு குறித்து, அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தன், பள்ளி மாணவர் ஷக்கீல் அகமது ஆகியோர் விழிப்புணர்வு பிரசார உரையை நிகழ்த்தினர். மேலும், உடல் நலத்தை பேணும் வகையில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில், ஹாஜி எம்.எஸ் முகமது அலி, ஹாஜி ஜமால், பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எப் முகமது சலீம், ஏ.கே சாகுல் ஹமீது, ஜாஹிர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முடிவில், குர்ஆன் மனனப்பிரிவு பயிற்றுநர் ஹாபிஸ் அபூபக்கர் நன்றி கூறினார்.

இதில், பள்ளி மேலாளர் அஸ்ரப் அலி, பள்ளி ஆசிரியர்கள் பார்த்த சாரதி, மவ்லவி முகமது இத்ரீஸ், உடற்கல்வி ஆசிரியர் டி.கார்த்திகேயன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
 


1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.