அதிராம்பட்டினம், அக்.18
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). வியாபாரி, இவர், தனது இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையிலிருந்து, ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக அதிராம்பட்டினத்திற்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தம்பிக்கோட்டை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரு மர்ம நபர்கள் சிவக்குமாரை வழிமறித்து, அருவாளால் தலையில் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த கைப்பை, செல்போன், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.
தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அப்பகுதியினர் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). வியாபாரி, இவர், தனது இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையிலிருந்து, ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக அதிராம்பட்டினத்திற்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தம்பிக்கோட்டை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரு மர்ம நபர்கள் சிவக்குமாரை வழிமறித்து, அருவாளால் தலையில் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த கைப்பை, செல்போன், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.
தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அப்பகுதியினர் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.