.

Pages

Wednesday, October 24, 2018

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை வருகின்ற 31.10.2018க்குள் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (அக்.24) புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி  தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணையதளத்தின் மூலம் குடும்ப அட்டையில் இணைத்துள்ளனர். 

இதுவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை குடும்ப அட்டையில் இணைக்காத குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 31.10.2018க்குள் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முழு பயனையும் பெறலாம் என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.