.

Pages

Sunday, October 28, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் இன்று (அக்.28) ஞாயிற்றுக்கிழமை, நாளை (அக்.29) திங்கட்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கல்லூரி வளாகம் தூய்மை செய்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு ஆகியன இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் முகாமை தொடங்கி வைத்தார்.  முகாமில், 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ். சாபிரா பேகம், கே. முத்துகுமாரவேல், எம் பழனிவேல்,  என்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.