.

Pages

Wednesday, October 31, 2018

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறிவிப்பு!

அதிராம்பட்டினம், அக்.31
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களால் துவக்கப்பட்டு 65 ஆண்டு காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்விப் பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் அனைத்து முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கிலும், துறைவாரியான கூட்டம் குறிப்பிட்ட நாட்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களும் மேற்படி சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
அலைப்பேசி: 9443777236  / வாட்ஸ்அப்: 6374455737
E-mail id : principal.kmcadirai@gmail.com /  kmcadiraialumini@gmail.com   

கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்...

























 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.