.

Pages

Friday, October 19, 2018

குவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு சமூக நல உதவித்தொகை!

அதிரை நியூஸ்: அக்.19
குவைத்திய ஆண்கள் பிற நாட்டுப் பெண்களை மணமுடித்து அவர்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைகளும் குவைத்தியர்களே என்றாலும் அந்த குழந்தைகளின் தாய்மார்கள் தொடர்ந்து அந்நியராகவே கருதப்பட்டு வருகின்றனர். இத்தகைய குவைத்தியர் அல்லாத தாய்மார்கள் விவாகரத்து செய்யப்பட்டால் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் கிடைப்பதில்லை என்பதை கருத்திற்கொண்டு அவர்களுக்கு சமூக நல உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவைத் சமூக நலன் மற்றும் தொழிலாளர் துறைக்கான அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குவைத் அரசு வழங்கவுள்ளது.

குவைத் சமூக நலன் மற்றும் தொழிலாளர் துறைக்கான அமைச்சகத்தின் மற்றொரு அறிவிப்பில், குவைத் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முனிசிபல் சபையின் பொதுச் செயலாளருக்கும் வெளிநாட்டு உதவியாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகை அறிவிப்பின் மூலம் 36 வெளிநாட்டினர் குவைத் அரசுப்பணியில் சேர முடியும்.

Source: http://news.kuwaittimes.net
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.