.

Pages

Wednesday, October 17, 2018

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அக்.31 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 31.10.2018 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்ற முகாம்களில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 01.09.2018 முதல் அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான முகாம்கள் நடைபெற்று வருகிறது. 09.09.2018, 23.09.2018, 07.10.2018, 14.10.2018 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 01.09.2018 முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் முகாம்களில் இதுவரை புதிதாக பெயர் சேர்க்க 37,445 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய 8,567 விண்ணப்பங்களும், திருத்தம் செய்ய 4,620 விண்ணப்பங்களும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 3,325 விண்ணப்பங்களும், ஆக கூடுதலாக 53,957 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 

இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி  மையங்களிலும் வருகின்ற 31.10.2018 வரை நடைபெறும். 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைக்கூடிய அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.