.

Pages

Monday, October 1, 2018

இறந்தவர்களை ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா கொண்டு வர வழங்கப்பட்ட 50% கட்டண சலுகை நீடிக்கும்!

அதிரை நியூஸ்: செப்.30
இறந்தவர்களை ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா கொண்டு வர வழங்கப்பட்ட 50% கட்டண சலுகை நீடிக்கும்

ஏர் இந்தியா விமான நிறுவனம் அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான வான்தடங்களில் மட்டும் அமீரகத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை 50 சதவிகித கார்கோ டிக்கெட் கட்டணத் தள்ளுபடியுடன் சுமந்து கொண்டு வந்தன. மேலும் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நாடு திரும்ப இயலாமல் தவிக்கும் பொருளாதார வசதி அறவேயில்லாத தொழிலாளர்களையும் இந்திய தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் இலவசமாக கொண்டு வந்து கொண்டிருந்தது.

கடந்த 19 ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் கார்கோ பிரிவு இனி சர்வதேச விமான ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இறந்தவர்களின் உடல்களை சுமந்து வர முழுக்கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் இந்திய தூதரகத்தின் சார்பில் ஏற்றி வரப்படும் இலவச சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்த ஏர் இந்தியாவின் கார்கோ பிரிவு, அமீரகத்திலிருந்து 50% கட்டணக் கழிவுடன் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் ஏற்றி வரப்படும் என்றும், இந்திய தூதரகத்தின் சார்பாக வசதியற்ற  தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் சேவையும் தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் பொருந்தும்.

மேற்படி தகவலை துபையிலுள்ள ஏர் இந்தியா அலுவலகமும் துபையிலுள்ள இந்திய துணைத் தூதரகமும் உறுதிபடுத்தியுள்ளன. ஏர் இந்தியா தனது முடிவை மறுபரிசீலணை செய்து எடுத்துள்ள நல்ல முடிவை நாமும் வரவேற்கின்றோம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.