.

Pages

Sunday, October 28, 2018

துபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் பிடித்து சாதனை !

அதிரை நியூஸ், அக்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நெய்னா முகமது. இவரது மகன் ஹாஜா நஜ்முதீன். இவர், கடந்த 10 ஆண்டுகளாக துபையில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் ஹனான் ஹில்மிய்யா (வயது 14). துபையில் உள்ள தி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அமீரகத்தில் நடப்பாண்டு 'ஜாயித்' ஆண்டாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தினத்தந்தி அமீரகப் பதிப்பு சார்பில், அமீரக மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

'அமீரகத்தின் தந்தை சேக் ஜாயித்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில், அமீரகத்தின் பல்வேறு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 200 பேர் பங்குபெற்றனர். இதில், மாணவி ஹனான் ஹில்மிய்யா முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தினர். விழாவில், சிறப்பு விருந்தினராக 'எழுத்தாளர்' பட்டுக்கோட்டை பிரபாகர் கலந்துகொண்டு, மாணவிக்கு கேடயப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய மாணவி ஹனான் ஹில்மிய்யாவுக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.