.

Pages

Sunday, December 30, 2018

துபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ல் ராகுல் காந்தி உரை!

அதிரை நியூஸ்: டிச.30
துபை, அபுதாபியில் ஜன.11, 12ல் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசவுள்ளார்.

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி மாலை 4 மணியளவில் துபை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசவுள்ளார். இந்த மைதானத்தில் சுமார் 25,000 பேர் அமர முடியும் என்பதுடன் 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நடப்புப் பிரதமர் மோடி இதேபோன்றதொரு நிகழ்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் பேசிச் சென்றுள்ளார் என்பதும் நினைவுகூறத்தக்கது.

Dubai Cricket Stadium Location Map

https://www.google.com/maps/vt/data=SsxJL2uWAbiK6_6ooErY7Np9Px101wj8AdBoMps-z4wivxUVADbzfVCm5rB2zoCw4DEZynEWAjU6OhK_-MNBfCMiESsP2JGZ40ZQDzXkAuQ45STTzA3j1uYxDqz7O7dnFLEGTE4EzNt_LX-eh8NhFVHl6Q

முன்னதாக, ஜனவரி 11 ஆம் தேதி காலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வணிகர்களையும், மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்றதொரு வணிகர் மற்றும் மாணவர் சந்திப்பு ஒன்றும் அபுதாபியில் ஜன. 12 காலையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷேக் ஜாயித் பள்ளியையும் சுற்றிப் பார்க்கவுள்ளார்.

ஜனவரி 12 ஆம் தேதி மாலையில் அபுதாபி இந்தியன் சோஷியல் & கல்ச்சுரல் சென்டர் (ISC) அரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். 37 ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்தியப் பிரதமரும் பாட்டியுமான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1981 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு விஜயம் செய்ததற்குப் பின் அவரது குடும்பத்திலிருந்து பேரன் ராகுல் காந்தி அவர்களே மீண்டும் வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ISC Abu Dhabi Location Map 

https://www.google.com/maps/vt/data=eGo4KZJOHvuE7_wa617lzUyZR0MgcT9dM4VrcOY8zQi8BwAluZPrfgoDBWPJqOW8MjZQza3wajQ3zboRlmv7j1nqxptSReQv0wcSGdHZesquMuFaxdSGZiqfFHKMXdKF4f2WimU3_l0-IitR7du0yVz9-w

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.