.

Pages

Thursday, December 20, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் புதிதாக அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்!

அதிராம்பட்டினம், டிச.20
கஜா புயலில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய சிக்னல் கோபுரம் சேதமடைந்ததையடுத்து புதிதாக கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. மேலும், ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தன.

இந்நிலையில், சேதமைடந்த கோபுரத்தின் பகுதிகளை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக சிக்னல் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் எஞ்சிய பணிகள் அடுத்து சில தினங்களில் நிறைவுற இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.