.

Pages

Monday, December 31, 2018

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (31.12.2018) நடைபெற்றது

இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்ததாவது:
உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில் தான் குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் குழந்தைகள் மீதான குற்ற புகார்களின் மீது Quick Response Cell மூலம் 24 மணி நேரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  குழந்தைகள்  மீதான குற்றங்கள் தொடர்பான புகார்களை www.ncpcr.gov.in என்ற இணைய தளத்தில் அளித்திடலாம்.  கொத்தடிமையாக மீட்கப்பட்ட சிறுவனை நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுவனின் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் புகார் பெட்டிகள்  வைக்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் பர்துகாப்பு அலகு சிறப்பாக செயல்படுகிறது. குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில் அதிக அளவில் விரைவாக தீர்ப்பு அளிக்கப்பட்ட மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் இருக்கிறது. இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.