அதிரை நியூஸ்: டிச.17
ஈரோட்டில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்தவர் டிரைவர் பாபு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர் சிகிச்சை பெற வேண்டி விடுமுறை தருமாறு பணிமனை மேலாளரிடம் அவரது மனைவி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வேண்டினார் ஆனால் மேலாளர் சுப்ரமணியன் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சம்பள பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக கண்டிப்புடன் தெரிவித்து விட்டார்.
டிரைவர் பாபுவின் கணக்கில் 70 நாட்கள் விடுப்புக்கள் இருக்கும் நிலையில் மேனேஜரின் அடாவடி முடிவால் மன உளச்சலுக்கு ஆளான டிரைவர் பாபு உடனடியாக குடும்பத்துடன் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் புறப்பட்டு ஈரோடு பணிமனைக்கே வந்துவிட்டார். பணிமனை வாயிற்காவலர்கள் ஆம்புலன்ஸை உள்ளே விட அனுமதி மறுக்க, சம்பவம் சக தொழிலாளர்களுக்குத் தெரியவர, திடீர் ஸ்ட்ரைக் நடத்தப்படும் நிலையில் இறங்கி வந்த மேலாளர் சுப்ரமணியன் டிரைவர் பாபுவிடமிருந்து விடுப்பு விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு உடனடியாக அனுமதி வழங்கி பிரச்சனைகளிலிருந்து தப்பித்தார்.
Source: onmanorama
தமிழில்: நம்ம ஊரான்
ஈரோட்டில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்தவர் டிரைவர் பாபு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர் சிகிச்சை பெற வேண்டி விடுமுறை தருமாறு பணிமனை மேலாளரிடம் அவரது மனைவி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு வேண்டினார் ஆனால் மேலாளர் சுப்ரமணியன் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சம்பள பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக கண்டிப்புடன் தெரிவித்து விட்டார்.
டிரைவர் பாபுவின் கணக்கில் 70 நாட்கள் விடுப்புக்கள் இருக்கும் நிலையில் மேனேஜரின் அடாவடி முடிவால் மன உளச்சலுக்கு ஆளான டிரைவர் பாபு உடனடியாக குடும்பத்துடன் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் புறப்பட்டு ஈரோடு பணிமனைக்கே வந்துவிட்டார். பணிமனை வாயிற்காவலர்கள் ஆம்புலன்ஸை உள்ளே விட அனுமதி மறுக்க, சம்பவம் சக தொழிலாளர்களுக்குத் தெரியவர, திடீர் ஸ்ட்ரைக் நடத்தப்படும் நிலையில் இறங்கி வந்த மேலாளர் சுப்ரமணியன் டிரைவர் பாபுவிடமிருந்து விடுப்பு விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு உடனடியாக அனுமதி வழங்கி பிரச்சனைகளிலிருந்து தப்பித்தார்.
Source: onmanorama
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.