அதிரை நியூஸ்: டிச.18
மனிதர்களின் சிந்தனைத்திறன் அற்புதமானவை, இந்த சிந்தனைத்திறன் நன்மையான செயல்களுக்கு பயன்படுவது போலவே தீமையான செயல்களுக்கும் பயன்படுகின்றன. சில விஷயங்கள் வெளிப்பட்ட பின் தான் அதன் அருமையே வெளியே தெரியும். நாம் அன்றாடம் சமூக ஊடகங்கள் வாயிலாக சந்திக்கும் 'மீம்ஸ்' மற்றும் 'மீம்ஸ் கிரியேட்டர்களின்' சிந்தனைத்திறன் உண்மையிலேயே பாராட்;டத் தகுந்தவை. பீடிகை இருக்கட்டும் ஒருபுறம்...
குயானா என்ற ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு மனிதர் நியூயார்க்கின் 'ஜான் எப் கென்னடி' விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த கருப்புப் பையை அதிகாரிகள் சந்தேகமடைந்து பரிசோதித்துப் பார்த்தால் அதனுள்ளே உயிருடன் 70 வண்ணச் சிட்டுக்குருவிகள் பெண்கள் அழகிற்காக தலைமுடியை சுருட்ட உதவும் உருளைகளுக்குள்ளே அடைத்து எடுத்து வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிட்டுக்குருவிகள் ரிங்காரமிடும் சப்தத்திற்கும், நீண்ட நேரத்திற்கும் ஏற்ப ஒவ்வொன்றும் சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகுமாம். பிடிபட்ட குருவிகளை விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன, குயானா ஆள் அடுத்த விமானத்திலேயே மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார். அவர் செய்தது தவறான செயல் தான் என்றாலும் வித்தியாசமாக சிந்தித்த அந்த செயல் பேஷ்.. பேஷ் தான்... என்றாலும்,
இது என்ன பிரமாதம் ஜெயலலிதா அம்மா அப்போலோ மருத்துவமனையில் சாப்பிட்ட 2 இட்லியின் விலை சுமார் 1 ¼ கோடி ரூபாய் என கணக்கெழுதியவர்களும், சீன தயாரிப்பான பட்டேல் சிலைக்கு 3,000 கோடி ரூபாய் கணக்கு காட்டிய பீஜேபி ஆட்சியாளர்களும், சில தெர்மாகோல்களை அணையில் மிதக்கவிட்டு விட்டு 10 லட்சம் கணக்குச் சொன்ன செல்லூர் ராஜூக்களும் 'ரொம்பப் பிரமாதமான சிந்தனையாளர்கள்' தான்.
என்ன சொல்ல வந்தீங்க... ஆமா! இது ரொம்ப முக்கியம் என்று தானே. வாய் வரை வந்ததை நிறுத்துனா எப்படி? சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிருங்க மக்கா..! நாம கோவிக்கவுலாம் மாட்டோம்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
மனிதர்களின் சிந்தனைத்திறன் அற்புதமானவை, இந்த சிந்தனைத்திறன் நன்மையான செயல்களுக்கு பயன்படுவது போலவே தீமையான செயல்களுக்கும் பயன்படுகின்றன. சில விஷயங்கள் வெளிப்பட்ட பின் தான் அதன் அருமையே வெளியே தெரியும். நாம் அன்றாடம் சமூக ஊடகங்கள் வாயிலாக சந்திக்கும் 'மீம்ஸ்' மற்றும் 'மீம்ஸ் கிரியேட்டர்களின்' சிந்தனைத்திறன் உண்மையிலேயே பாராட்;டத் தகுந்தவை. பீடிகை இருக்கட்டும் ஒருபுறம்...
குயானா என்ற ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு மனிதர் நியூயார்க்கின் 'ஜான் எப் கென்னடி' விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த கருப்புப் பையை அதிகாரிகள் சந்தேகமடைந்து பரிசோதித்துப் பார்த்தால் அதனுள்ளே உயிருடன் 70 வண்ணச் சிட்டுக்குருவிகள் பெண்கள் அழகிற்காக தலைமுடியை சுருட்ட உதவும் உருளைகளுக்குள்ளே அடைத்து எடுத்து வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிட்டுக்குருவிகள் ரிங்காரமிடும் சப்தத்திற்கும், நீண்ட நேரத்திற்கும் ஏற்ப ஒவ்வொன்றும் சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகுமாம். பிடிபட்ட குருவிகளை விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன, குயானா ஆள் அடுத்த விமானத்திலேயே மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார். அவர் செய்தது தவறான செயல் தான் என்றாலும் வித்தியாசமாக சிந்தித்த அந்த செயல் பேஷ்.. பேஷ் தான்... என்றாலும்,
இது என்ன பிரமாதம் ஜெயலலிதா அம்மா அப்போலோ மருத்துவமனையில் சாப்பிட்ட 2 இட்லியின் விலை சுமார் 1 ¼ கோடி ரூபாய் என கணக்கெழுதியவர்களும், சீன தயாரிப்பான பட்டேல் சிலைக்கு 3,000 கோடி ரூபாய் கணக்கு காட்டிய பீஜேபி ஆட்சியாளர்களும், சில தெர்மாகோல்களை அணையில் மிதக்கவிட்டு விட்டு 10 லட்சம் கணக்குச் சொன்ன செல்லூர் ராஜூக்களும் 'ரொம்பப் பிரமாதமான சிந்தனையாளர்கள்' தான்.
என்ன சொல்ல வந்தீங்க... ஆமா! இது ரொம்ப முக்கியம் என்று தானே. வாய் வரை வந்ததை நிறுத்துனா எப்படி? சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிருங்க மக்கா..! நாம கோவிக்கவுலாம் மாட்டோம்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.