அதிரை நியூஸ்: டிச.30
இயற்கையான முறையில் 65 வயதில் கருவுற்று குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
நவீன யுகத்தில் 72 வயதுடைய பெண்மணிகள் வரை குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் என்கிற செயற்கை கருவூட்டல் எனும் மருத்துவ தொழிற்நுட்பத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகியுள்ளது. இந்தியப் பெண்களுக்கு மாதவிலக்கு அதிகபட்சம் 47 வயதில் நின்றுவிடும், மாதவிலக்கு நின்ற பெண்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதினும் மிக அரிதான செயலாகும்.
சுமார் 50 வயதுகளில் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் 65 வயதில் இந்த காஷ்மீரப் பெண்மணி ஆரோக்கியமானதொரு பெண் குழந்தையை பெற்றுள்ளது உலக சாதனையாகும் என மகப்பேறு மருத்துவர் ஷப்Pர் சித்தீகி தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 10 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த பெண் குழந்தையை அல்லாஹ் தனக்கு அருளிய விலைமதிப்பற்ற பரிசு என வர்ணிக்கும் இந்த பெண்மணியின் கணவர் ஹக்கீமுத்தின் 80 வயது முதியவர் என்பதுடன் ஏற்கனவே 2 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் மாநில அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் தற்போது மத்திய பாஜக அரசின் ஏஜென்டான கவர்னர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டில் செயற்கை கருவூட்டல் முறைப்படி இதற்கு முன் மிக தனது 66வது வயதில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மன் என்ற பெண் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார், இவர்களே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதிய வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற அங்கீகாரத்திற்கு உரியவர்.
அதேபோல் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி செயற்கை கருவூட்டலில் 2 முறை தோல்வியடைந்திருந்த நிலையில் 3வது முயற்சியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அல் குர்ஆனின் கூற்றுப்படி மிகவும் முதிய வயதில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இறைத்தூதர் ஜக்கரியா (அலை) மற்றும் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை)ஆகியோர் ஆவர்.
இறைத்தூதர் ஜக்கரியா (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا
19:8. “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:9
قَالَ كَذٰلِكَۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا
19:9. “(அது) அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ
15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:54
قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ
15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
Source: Khaleej Times & Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்
இயற்கையான முறையில் 65 வயதில் கருவுற்று குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
நவீன யுகத்தில் 72 வயதுடைய பெண்மணிகள் வரை குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் என்கிற செயற்கை கருவூட்டல் எனும் மருத்துவ தொழிற்நுட்பத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகியுள்ளது. இந்தியப் பெண்களுக்கு மாதவிலக்கு அதிகபட்சம் 47 வயதில் நின்றுவிடும், மாதவிலக்கு நின்ற பெண்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதினும் மிக அரிதான செயலாகும்.
சுமார் 50 வயதுகளில் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் 65 வயதில் இந்த காஷ்மீரப் பெண்மணி ஆரோக்கியமானதொரு பெண் குழந்தையை பெற்றுள்ளது உலக சாதனையாகும் என மகப்பேறு மருத்துவர் ஷப்Pர் சித்தீகி தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 10 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த பெண் குழந்தையை அல்லாஹ் தனக்கு அருளிய விலைமதிப்பற்ற பரிசு என வர்ணிக்கும் இந்த பெண்மணியின் கணவர் ஹக்கீமுத்தின் 80 வயது முதியவர் என்பதுடன் ஏற்கனவே 2 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் மாநில அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் தற்போது மத்திய பாஜக அரசின் ஏஜென்டான கவர்னர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டில் செயற்கை கருவூட்டல் முறைப்படி இதற்கு முன் மிக தனது 66வது வயதில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மன் என்ற பெண் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார், இவர்களே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதிய வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற அங்கீகாரத்திற்கு உரியவர்.
அதேபோல் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி செயற்கை கருவூட்டலில் 2 முறை தோல்வியடைந்திருந்த நிலையில் 3வது முயற்சியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அல் குர்ஆனின் கூற்றுப்படி மிகவும் முதிய வயதில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இறைத்தூதர் ஜக்கரியா (அலை) மற்றும் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை)ஆகியோர் ஆவர்.
இறைத்தூதர் ஜக்கரியா (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا
19:8. “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:9
قَالَ كَذٰلِكَۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا
19:9. “(அது) அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ
15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:54
قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ
15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
Source: Khaleej Times & Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.