அதிராம்பட்டினம், டிச.27
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைத்து இருந்த 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.
கஜா புயலுக்கு பின் சிறிது இடைவெளியில் மீண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், செப்டிக் டேங், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்புச் சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கூரை, கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை நடைபெறுகின்றன.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று தெரிவித்தது.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைத்து இருந்த 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.
கஜா புயலுக்கு பின் சிறிது இடைவெளியில் மீண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், செப்டிக் டேங், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்புச் சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கூரை, கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை நடைபெறுகின்றன.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று தெரிவித்தது.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 90 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய அனைத்து பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து முடிந்துள்ளது.
3. கஜா புயலில் சேதமடைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 100 அடி உயர சிக்னல் கோபுரம் அதன் அருகில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்பு சுவர், கழிப்பறை, செப்டிக் டேங் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி முடிந்துள்ளது.
7. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
8. ரயில் நிலையம் முகப்பு பகுதி அருகில் குடியிருப்பு கழிவு நீர், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், ரயில் நிலையத்திற்கு செல்ல நுழைவாயில் வளைவு அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து முடிந்துள்ளது.
3. கஜா புயலில் சேதமடைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 100 அடி உயர சிக்னல் கோபுரம் அதன் அருகில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்பு சுவர், கழிப்பறை, செப்டிக் டேங் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி முடிந்துள்ளது.
7. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
8. ரயில் நிலையம் முகப்பு பகுதி அருகில் குடியிருப்பு கழிவு நீர், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், ரயில் நிலையத்திற்கு செல்ல நுழைவாயில் வளைவு அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது.
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.