.

Pages

Sunday, December 30, 2018

துபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக நடந்த பயணி கைது!

அதிரை நியூஸ்: டிச.30
துபையிலிருந்து உ.பி மாநிலத்தின் தலைநகர் லக்னோவிற்கு நேற்றுக்காலை சுமார் 150 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் பயணித்த ஒருவன் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு பிற விமானப் பயணிகள் முன் நிர்வாணமாக நடந்து சென்றான்.

விமானத்தின் பைலட் உத்தரவிட்டதையடுத்து விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்தப் பயணியை விமான சிப்பந்திகள் பிடித்து ஒரு இருக்கையோடு கட்டி வைத்தனர். நிர்வாணமாக இருந்த அவன் மீது ஒரு போர்வையை கொண்டும் போர்த்தினர்.

விமானம் பகல் 12.05 மணியளவில் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

இது இப்படி என்றால் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் ஒரேயொரு பயணியுடன் மட்டும் பறந்துள்ளது

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ மாநிலத்தின் 'தவோவ்' (Davao) விமான நிலையத்திலிருந்து தலைநகர் மணிலாவிற்கு (Manila) ஒரெயொரு பயணியுடன் சென்றுள்ளது. விமானத்தில் ஏறிய மிஸ். லூயிசா எரிஸ்பே என்ற அந்த இளம்பெண் தன்னுடன் வேறு யாரும் பயணிக்காதது கண்டு அச்சமடைந்துள்ளார் எனினும் அந்த ஒரு பயணிக்கும் விமான ஊழியர்கள் எப்போதும் போல் உற்சாகமாக சேவையாற்றியதை தொடர்ந்து அவரும் உற்சாகமாகியுள்ளார்.

இதுகுறித்த அனுபவத்தை லூயிசா முகநூலில் பதிந்ததை தொடர்ந்து 'ஒரு பயணி' என்பதற்காக விமான சேவையை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்கிய நிர்வாகம், பைலட் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன் 'தனக்காக மட்டும்' இயக்கப்பட்ட அந்த விமான பயணம் குறித்தும் வாழ்நாள் நினைவு பொக்கிஷம் எனவும் மெய்சிலிர்த்து எழுதியுள்ளார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.