.

Pages

Thursday, December 20, 2018

குவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி!

அதிரை நியூஸ்: டிச.20
குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நாடு தழுவிய தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டியில் 16 அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், தனது பதினான்காம் ஆண்டு மீலாது நபி விழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் குவைத் தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டிகளை சால்மியா பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளாளர் திருபுவனம் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட சங்கத்தின் விளையாட்டுக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.

குவைத் நாட்டில் சமூக சேவைகள் செய்து கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளில் பதினாறு அணியினர் பங்கேற்றனர்.
ஒரு பிரிவில் நான்கு அணிகள் என மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கும், ஆட்ட நாயகனுக்கும் குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் வழங்கிய சுழற்கோப்பைகளும், பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் நிறுவனர் ஹச். முஸாவுத்தீன் ஆகியோர் போட்டியில் முதலிடம் பெற்ற அணி தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியினருக்கும், இரண்டாமிடம் பெற்ற குவைத் தமிழ் நண்பர்கள் (ஃபர்வானிய்யா) அணியினருக்கும் சுழற்கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். ஆட்ட நாயகன் விருது தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியின் தலைவர் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், விளையாட்டுக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.