.

Pages

Saturday, December 29, 2018

புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செலுத்த வற்புறுத்தக் கூடாது: டிஆர்ஓ அறிவுறுத்தல்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனை உடனடியாகத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றார் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல்.

ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடன்களை மறு சீரமைப்பது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அனவாரி சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதத்தின்படி கடன் செலுத்தும் கால அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடனைத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக்கூடாது என்றார் அவர்.

கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பிரதிநிதி தியாகராஜன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் லெட்சுமி நரசிம்மன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆர். வரதராஜன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.