மல்லிபட்டினம், டிச.31-
மீனவ மக்களுக்கு புயல் நிவாரணம் முறையாக வழங்கிடக் கோரி தஞ்சை மாவட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சங்க நிர்வாகிகள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன், எஸ்.நிஜாமுதீன், செந்தில்குமார், நாகேந்திரன், சந்திரசேகர், முகமது அனிபா மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ 10 ஆயிரம் வாழ்வாதார நிதியாக உடனடியாக வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப் படகுகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை ரூ 80 ஆயிரத்தை கூட்டு வங்கி கணக்கில் சேர்க்காமல் நேரடியாக மீனவர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
பகுதி சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 30 ஆயிரத்தை குறைக்காமல் வழங்கிடவேண்டும். சுனாமி வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும்.
மீனவக் குடும்பங்களின் அனைத்து கூட்டுறவுக் கடன், வங்கிக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மீனவப் பெண்கள் வாங்கியுள்ள சுய உதவி குழு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பெண்களிடம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல் செய்ய அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு கேட்டுள்ள ரூபாய் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
தம்பிக்கோட்டை வடகாடு, மறவக்காடு, அதிராம்பட்டினம், சின்னமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட அனைவருக்கும் சுனாமி வீடுகள் கட்டித்தரவேண்டும். மீனவத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவ மக்களுக்கு புயல் நிவாரணம் முறையாக வழங்கிடக் கோரி தஞ்சை மாவட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சங்க நிர்வாகிகள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன், எஸ்.நிஜாமுதீன், செந்தில்குமார், நாகேந்திரன், சந்திரசேகர், முகமது அனிபா மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ 10 ஆயிரம் வாழ்வாதார நிதியாக உடனடியாக வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப் படகுகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை ரூ 80 ஆயிரத்தை கூட்டு வங்கி கணக்கில் சேர்க்காமல் நேரடியாக மீனவர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
பகுதி சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 30 ஆயிரத்தை குறைக்காமல் வழங்கிடவேண்டும். சுனாமி வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும்.
மீனவக் குடும்பங்களின் அனைத்து கூட்டுறவுக் கடன், வங்கிக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மீனவப் பெண்கள் வாங்கியுள்ள சுய உதவி குழு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பெண்களிடம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல் செய்ய அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு கேட்டுள்ள ரூபாய் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
தம்பிக்கோட்டை வடகாடு, மறவக்காடு, அதிராம்பட்டினம், சின்னமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட அனைவருக்கும் சுனாமி வீடுகள் கட்டித்தரவேண்டும். மீனவத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.