.

Pages

Tuesday, December 18, 2018

பட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்கிரசார் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.18
கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மண் சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை (அறந்தாங்கி முக்கம்) காந்தி சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்.ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், தஞ்சை மாநகரத் தலைவர் டி.ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் ஏ.கே குமார் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தென்னை கன்றுகள் இறக்குமதி செய்து வழங்க வேண்டும், பாதிப்படைந்த மீனவர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகள் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்க வேண்டும், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியும், கஜா புயலில் பாதிப்படைந்த குடிசை, ஓட்டு வீடுகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கான்கிரட் வீடுகளாக கட்டித் தரவேண்டும், தென்னை விவசாயக் குடும்பங்களை காப்பாற்ற அவர்களின் விவசாயக் கடன், கல்விக் கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

முடிவில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் பி.வைத்திலிங்கம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் ஜெ.ஏ பழனிவேல், மதுக்கூர் வட்டாரத் தலைவர் எஸ்.வி ரவிச்சந்திரன், மதுக்கூர் பேரூர் தலைவர் ஆர். புஷ்பநாதன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தமாகாவினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.