.

Pages

Monday, December 31, 2018

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (31.12.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,  பட்டா மாற்றம், கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர், குவைத் நாட்டில் பணியின் போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி வடபாதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சட்டப்படியாக சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,23,432க்கான காசோலையினை அவரது மனைவி மாலதி என்பவரிடமும், சவுதி அரேபியா நாட்டில் பணியின் போது இறந்த தஞ்சாவூர் வட்டம், வண்ணாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.74,815க்கான காசோலையினை அவரது மனைவி ராஜலெட்சுமி என்பவரிடமும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) பாலச்சந்திரன், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.