.

Pages

Saturday, December 29, 2018

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொதுமக்கள் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கஜா புயலில் பாதிப்படைந்த ஏரிப்புறக்கரை வருவாய் கிராமப் பகுதிகளுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக வருவாய்துறை சார்பில் ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் டோக்கன் வழங்கி நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

அதன்படி, அதிராம்பட்டினம் ஆஸாத் நகர், ஏரிப்புறக்கரை பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதியினருக்கு இன்று சனிக்கிழமை காலை டோக்கன் வழங்கப்பட்டன.

இதில், பிலால் நகர் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் புயலில் கடுமையாக பாதிப்படைந்தும், சிலருக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காமல் பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் பெண் திடீர் மயக்கம்:
போராட்டத்தில் ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சிறப்பு வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் அதிராம்பட்டினம் போலீஸார் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.