.

Pages

Sunday, December 30, 2018

குவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை போல் பொது விடுமுறை அளிக்க திட்டம்!

அதிரை நியூஸ்: டிச.30
குவைத் தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை போல் பொது விடுமுறை அளிக்க உத்தேச திட்டம்

குவைத் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடப்படும் பொது விடுமுறைகளுடன் ஒப்பிடும் போது தனியார் துறையினருக்கு கிடைக்கும் பொது விடுமுறை தினங்கள் மிகவும் குறைவு என்ற குறைபாடு நிலவுகின்றது. தனியார் நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் செய்து கொண்டு பணி ஒப்பந்தத்தை அனுசரித்தே விடுப்புக்கள் வழங்கப்படுகின்றன.

குவைத் அரசு வேலைவாய்ப்புகளில் சுமார் 3 ½ லட்சம் குவைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தனியார் துறையில் நிலவும் விடுமுறை தின குறைவின் காரணமாகவே சுமார் 58% குவைத்தியர்கள் தனியார் நிறுவன பணிகளில் சேர விரும்புவதில்லை என்றதொரு புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்த பொது விடுமுறை பிரச்சனையை சரிசெய்வதன் மூலம் குவைத்தியர்களை தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளின் பக்கம் ஈர்க்க முடியும் என அரசு நம்புகின்றது.

எனவே, அரசின் பொது விடுமுறை நாட்களைப் போன்றே தனியார் துறையினருக்கும் பொது விடுமுறை வழங்கும் உத்தேசத் திட்டம் ஒன்றை அரசின் பரிசீலணைக்கான அனுப்பியுள்ளது குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன். நெல்லுக்கு (குவைத்தியர்களுக்கு) பாய்கின்ற நீர் புல்லுக்கும் (வெளிநாட்டினருக்கும்) பாயாமல் போய்விடுமா என்ன?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.