.

Pages

Sunday, December 23, 2018

இந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு!

அதிரை நியூஸ்: டிச.23
அடிக்கடி எரிமலை வெடிப்பு, பூகம்பம், சுனாமி பேரலைகள் என இயற்கை சீற்றங்களை சந்தித்து வரும் இந்தோனேஷியாவில் இன்று எரிமலை வெடிப்பை தொடர்ந்து இந்தோனேஷிய தீவுகளை சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் சிக்கி இதுவரை பலி எண்ணிக்கை சுமார் 168 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 2 பேரை காணவில்லை. மேலும் சுமார் 430 வீடுகள் மற்றும் 9 ஹோட்டல்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அனக் கிரக்கத்தவ் (Anak Krakatau) என்ற எரிமலை நேற்றிரவு சுமார் இந்தோனேஷிய நேரம் 9.03 மணியளவில் வெடித்தiதை தொடர்ந்து கடலுக்குள் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தொடர்ந்து இந்த சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்த 24 நிமிடத்திலேயே சுனாமி அலைகள் 'சுன்டா நீரிணை' (Sunda Strait) பகுதியில் அமைந்துள்ள தீவுகளான பண்டேகிளாங் (Pandeglang), செராங் (Serang) மற்றும் தென் லம்புங் (South Lambung) ஆகியவை பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ளன.

தற்போது கிடைத்த செய்திகளின் படி...
இறப்பு எண்ணிக்கை 222, காயமடைந்தவர்கள் சுமார் 843, காணாமல் போனவர்கள் 28 என இழப்புக்களின் பட்டியல் உயர்ந்து கொண்டுள்ளது.

Sources: CNN & Star online
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.