.

Pages

Monday, December 31, 2018

துபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்!

அதிரை நியூஸ்: டிச.31
துபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின்திட்டத்தின் 4 ஆம் கட்டப்பணிகளின் நிலவரம்

துபையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம் என்ற சாதனையை துபை மின் வாரியம் நிகழ்த்தியுள்ளது. 50 பில்லியன் திர்ஹத்தில் அமைக்கப்பட்டு வரும் இப்பெரும் திட்டத்தின் 4 ஆம் கட்டப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5,000 மெகவாட் மின் உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 கட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் 3 வது கட்டப்பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நிறைவடைந்து உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் 4 வது கட்டப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன, இதிலிருந்து சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த 4வது கட்டப்பணிகளுக்கான Concentrated Solar Power (CSP) 128 தூண்களை ஊன்றும் பணி நிறைவடைந்துள்ளது.

துபையிலுள்ள இந்த பிரம்மாண்ட சூரியஒளி மின்தயாரிப்பு Parabolic basin complex, solar tower and photovoltaic panels ஆகிய 3 வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவதும், இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தை 15 மணிநேரங்கள் வரை சேமித்து வைக்கவும் வசதிகள் உள்ளன. உலகின் மற்ற மின்தயாரிப்புகளோடு ஒப்பிடுகையில் இந்த சூரிய ஒளி மின்திட்டமே மிக மிக குறைவான செலவில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.