.

Pages

Sunday, December 30, 2018

ராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.30
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இயங்கி வரும் கேரியர் பாயிண்ட் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஒரு வார கால சிறப்பு பயிற்சி முகாமில், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளித் தாளாளர் வீ.சுப்ரமணியன், முதல்வர் என்.ரகுபதி, ஆசிரியர்கள் மற்றும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.

முகாமில், ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்ச், அறிவியல், கணிதவியல், வேதிக்கணக்குப்பாடங்கள் ஆகியவற்றை பயிற்சியளித்தனர்.

இதுகுறித்து பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் கூறியது;
'மாணவர்களை மருத்துவம், பொறியியல் போன்ற போட்டித்தேர்விற்கு தயார் படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மையத்தில் போட்டித்தேர்வுக்கான ஒரு வார கால பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட்டது.

வரும் 2019-2020 ம் கல்வியாண்டு முதல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வருடமும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு வருடமும், NEET IIT-JEE நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்காக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களை பள்ளிக்கு வரவழைத்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுளோம். மேலும், 6 முதல், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான அடிப்படைப்பயிற்சி அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.