![]() |
சாதனையாளர் M.M.S சகாபுதின் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன். இவர் மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் எம்.எம்.எஸ் சகாபுதீன் (வயது 61). வழக்குரைஞர் மற்றும் நடைபயிற்சி வீரர் ஆவார்.
இந்நிலையில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், 37 வது ஆண்டு மாநில அளவிலான நடைப்போட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஏ.வி.வி.எம் கல்லூரியில் டிச.29,30 ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது. இதில், 60-வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் எம்.எம்.எஸ் சகாபுதீன் கலந்துகொண்டு, 34 நிமிடம், 35 விநாடிகளில் 5 கி.மீ. இலக்கை எட்டி, முதல் இடம் பிடித்து 'மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிச்சென்றார்.
இதையடுத்து, சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதினுக்கு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், பதக்கம், பாராட்டுச்சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதின் கூறியது;
'கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நடை பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன். பட்டுக்கோட்டை நடை பயிற்சியாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளேன். இச்சங்கம் சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். கடந்த ஆண்டு மாநில அளவில் கரூரில் நடந்த போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றேன். தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் மாநில அளவில் நடந்த போட்டியில் 2-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நடைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்றார்.
வாழ்த்துக்கள்
ReplyDelete