.

Pages

Monday, December 31, 2018

5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது தடவையாக மாநில அளவில் சாதனை! (படங்கள்)

சாதனையாளர் M.M.S சகாபுதின்
அதிராம்பட்டினம், டிச.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன். இவர் மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் எம்.எம்.எஸ் சகாபுதீன் (வயது 61). வழக்குரைஞர் மற்றும் நடைபயிற்சி வீரர் ஆவார்.

இந்நிலையில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், 37 வது ஆண்டு மாநில அளவிலான நடைப்போட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஏ.வி.வி.எம் கல்லூரியில் டிச.29,30 ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது. இதில், 60-வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் எம்.எம்.எஸ் சகாபுதீன் கலந்துகொண்டு, 34 நிமிடம், 35 விநாடிகளில் 5 கி.மீ. இலக்கை எட்டி, முதல் இடம் பிடித்து 'மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிச்சென்றார்.

இதையடுத்து, சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதினுக்கு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், பதக்கம், பாராட்டுச்சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதின் கூறியது;
'கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நடை பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன். பட்டுக்கோட்டை நடை பயிற்சியாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளேன். இச்சங்கம் சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். கடந்த ஆண்டு மாநில அளவில் கரூரில் நடந்த போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றேன். தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் மாநில அளவில் நடந்த போட்டியில் 2-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நடைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்றார்.
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.