அதிரை நியூஸ்: டிச.30
அபுதாபியில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்
பேங்க் லோன் வாங்குவதும் அதை முறையாக கட்டு வருவதும், கட்டாமல் அல்லது கட்ட இயலாமல் தடுமாறுவதும் நடப்பே. அதேபோல் வங்கியின் வாராகடன்களை வசூலிக்க வங்கிகளும் பல்வேறு உத்திகளை கையாளும், அதில் ஒன்று வசூலுக்காக அவுட்சோர்சிங் முகவர்களை நியமிப்பது. இந்த பேங்க் ஏஜென்ட்டுகளால் வாடிக்கையாளர் கஷ்டப்படுவதும், வாடிக்கையாளர்கள் தரும் குடைச்சல்களால் ஏஜென்டுகள் தலைதெறிக்க ஓடுவதும் நடப்பில் உள்ளதே.
அமீரகத்தில் ஒரு வங்கியில் ஒருவர் லோன் வாங்கியிருந்துள்ளார் ஆனால் முறையாக தவணையை கட்டவில்லை எனத் தெரிகிறது. இவரிடமிருந்து கடனை வசூலிக்க ஏஜென்ட் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். அதற்கான அத்தாட்சி கடிதமும் அவருக்கு வழங்கப்படுகிறது.
வேலையில் உடும்புப்பிடி உத்தமனாக மாறிய பேங்க் ஏஜென்ட் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்திட தினமும் ஒவ்வொரு ஓரு மணிநேரத்திற்கும் 20க்கு மேற்பட்ட முறைகள் போன் செய்து 'காசெங்கே?' எனக்கேட்டு தொடர் தொந்தரவு தந்து வந்துள்ளார். ஒருநாள் லோன் வாங்கியவரால் போனை எடுத்துப் பேச முடியாத சூழலில் அவரை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் ஒருவர் எடுத்து பதிலளிக்கின்றார்.
'யோவ்! நீ கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாம உங்க வாடிக்கையாளர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டாரு! ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு போயிட்டிருக்கோம்' என்கிற அம்சத்தில் பதில் தந்துள்ளார் ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர்.
தொடர் போன் தொல்லையால் உயர் ரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகிய லோன் வாங்கிய வாடிக்கையாளர் பேங்க் வசூல் ராஜா மீது போலீஸில் புகார் தருகின்றார் ஆனால் வங்கி ஏஜென்ட் தன் பணியை செய்ததற்காக சிக்கலில் மாட்டி விழிபிதுங்கி நின்றதை கண்ணுற்ற வாடிக்கையாளர் அவர் மீது பரிதாபப்பட்டு போலீஸ் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கி ஏஜென்ட் வயிற்றில் பால் வார்த்துள்ளார். இந்நேரம் ஏஜென்ட் கண்டிப்பா வேறு வேலை தேடிக்கொண்டு இருப்பார் என நம்பலாம்!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபியில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்
பேங்க் லோன் வாங்குவதும் அதை முறையாக கட்டு வருவதும், கட்டாமல் அல்லது கட்ட இயலாமல் தடுமாறுவதும் நடப்பே. அதேபோல் வங்கியின் வாராகடன்களை வசூலிக்க வங்கிகளும் பல்வேறு உத்திகளை கையாளும், அதில் ஒன்று வசூலுக்காக அவுட்சோர்சிங் முகவர்களை நியமிப்பது. இந்த பேங்க் ஏஜென்ட்டுகளால் வாடிக்கையாளர் கஷ்டப்படுவதும், வாடிக்கையாளர்கள் தரும் குடைச்சல்களால் ஏஜென்டுகள் தலைதெறிக்க ஓடுவதும் நடப்பில் உள்ளதே.
அமீரகத்தில் ஒரு வங்கியில் ஒருவர் லோன் வாங்கியிருந்துள்ளார் ஆனால் முறையாக தவணையை கட்டவில்லை எனத் தெரிகிறது. இவரிடமிருந்து கடனை வசூலிக்க ஏஜென்ட் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். அதற்கான அத்தாட்சி கடிதமும் அவருக்கு வழங்கப்படுகிறது.
வேலையில் உடும்புப்பிடி உத்தமனாக மாறிய பேங்க் ஏஜென்ட் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்திட தினமும் ஒவ்வொரு ஓரு மணிநேரத்திற்கும் 20க்கு மேற்பட்ட முறைகள் போன் செய்து 'காசெங்கே?' எனக்கேட்டு தொடர் தொந்தரவு தந்து வந்துள்ளார். ஒருநாள் லோன் வாங்கியவரால் போனை எடுத்துப் பேச முடியாத சூழலில் அவரை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் ஒருவர் எடுத்து பதிலளிக்கின்றார்.
'யோவ்! நீ கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாம உங்க வாடிக்கையாளர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டாரு! ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு போயிட்டிருக்கோம்' என்கிற அம்சத்தில் பதில் தந்துள்ளார் ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர்.
தொடர் போன் தொல்லையால் உயர் ரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகிய லோன் வாங்கிய வாடிக்கையாளர் பேங்க் வசூல் ராஜா மீது போலீஸில் புகார் தருகின்றார் ஆனால் வங்கி ஏஜென்ட் தன் பணியை செய்ததற்காக சிக்கலில் மாட்டி விழிபிதுங்கி நின்றதை கண்ணுற்ற வாடிக்கையாளர் அவர் மீது பரிதாபப்பட்டு போலீஸ் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கி ஏஜென்ட் வயிற்றில் பால் வார்த்துள்ளார். இந்நேரம் ஏஜென்ட் கண்டிப்பா வேறு வேலை தேடிக்கொண்டு இருப்பார் என நம்பலாம்!
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.