.

Pages

Friday, December 21, 2018

காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர தடைக்கான உத்தரவு வாபஸ்!

அதிரை நியூஸ்: டிச.21
காஷ்மீர் பள்ளிக்கூடங்களுக்கு கலாச்சார உடை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவு ஏற்படுத்திய எதிர்ப்பை தொடர்ந்து வாபஸ்

காஷ்மீர் ஆண், பெண் என இருபாலர் மக்களின் வாழ்வியலோடு, கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது 'பேரான்' (Pheran) என்ற உடை. இது நீண்ட அங்கியை போன்றது, இவை முழுமையாக கம்பளி (Wool) அல்லது கம்பளி மற்றும் பருத்தி (Cotton) கலந்து நெய்யப்படுகின்றது. இந்த ஆடை காஷ்மீரில் நிலவும் குளிரைத் தாங்கவல்லது.

இந்த ஆடையை உடுத்திக் கொண்டு ஸ்ரீநகரில் உள்ள மாநில அரசின் தலைமை செயலகத்திற்கு (The General Administration Department of the Civil Secretariat in Srinagar) வரும் அரசு அலுவலகர்கள் மட்டும் அங்கு வெளிலுள்ள நீண்ட இரும்புக் கம்பங்களில் 'பேரானை' மாட்டி வைத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும் என பாதுகாப்பை காரணம் காட்டி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களுக்கும் 'பேரான்' அணிந்து வரக்கூடாது என மாநில கவர்னர் அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து மாநில அரசு பள்ளிக்கூடங்களுக்கான உத்தரவை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் தலைமைச் செயலகத்திற்கான உத்திரவு மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தை தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பீஜேபி அரசின் ஏஜென்டாக இருந்து கவர்னர் ஆண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாக (Cultural onslaught) கருதப்படும் இந்த அநியாய உத்தரவிற்கு எதிராக பலரும் தங்களின் எதிர்ப்பை சமூக தளங்களில் பதிவு செய்தனர்.

அவற்றில் சில மட்டும் உங்களின் பார்வைக்கு...
நானும், எனது தந்தையும் பலமுறை 'பேரான்' உடையை அணிந்து பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றுள்ளோம், இனிமேலும் அணிவோம். அரசாங்கத்தின் முட்டாள்மனமான உத்தரவுகள் ஒருபோதும் நீடிக்காது – உமர் அப்துல்லா, முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர்.

எனது காஷ்மீரக் கலாச்சாரமே எனது அடையாளம். 'பேரான்' எனது கலாச்சாரத்தின் ஒர் பிரிக்க முடியாத அங்கம். இதை நான் அணிவதற்கோ அல்லது அணியாமல் இருப்பதற்கோ எவருடைய அனுமதியை பெற வேண்டிய தேவையில்லை. எனது காஷ்மீரக் கலாச்சாரத்தை இறுதிமூச்சு உள்ளவரை பேணுவேன் - இம்தியாஸ் பாண்டவ்.

நம் நாட்டிலுள்ள ஒரு மிகச்சிறு பிரிவினரின் கட்டளைகளை விரும்பியோ, விரும்பாமலோ பன்முக கலாச்சாரமுடைய பெரும்பான்மை இந்தியர்கள் குருட்டுத்தனமாக பின்பற்றியே ஆக வேண்டும் என நினைக்கின்றது. நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என தீர்மானிக்கின்றது. நம்மை அடிமைகளாக கருதும் இந்த தேசம் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என தன்னை அழைத்துக் கொள்வதில் தான் எவ்வளவு போலித்தனம் நிறைந்துள்ளது! – அப்துல்காதர்MB.

இந்தியா பன்முகக் கலாச்சாரத்தை பின்பற்றும் நாடு ஆனால் 'பேரான்' போன்ற கலாச்சார உடைகள் அவர்களுக்கு திடீரென சங்கடங்களாக தெரிகின்றன, ஆனால் ஏன்? – அப்ராருல் ஹக்.

'பேரான்' திடீரென தடைசெய்யப்படுவது அபத்தமானது, இது மக்களின் கலாச்சாரம் மற்றும் எலும்புகளை சில்லிட வைக்கும் குளிரிலிருந்து காக்கும் கவசம். காஷ்மீருக்கு வரும் எண்ணற்ற சுற்றுலாவாசிகள் கூட 'பேரான்' அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை தங்களின் வாழ்நாள் நினைவாக போற்றுகின்றனர். – லவ்கேஷ் மால்வியா

என பலரும் இத்தடையை கண்டித்து கருத்திட்டு வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.