அதிராம்பட்டினம், அக்.01
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு 7 நாட்கள் கல்விச் சுற்றுலா, கடந்த செப்.26 ந் தேதி, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமையில், 2 ஆம் ஆண்டாக பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் 14 பேர் அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு, அங்கு 3 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர், அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ டிஸ்னிலாண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அமெரிக்கா நாசா விண்வெளி மைய கல்விச்சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்து சில தினங்களில் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் கூறியது;
'அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், மாணவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைகோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி? அது எப்படி இயக்கப்படுகிறது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள அப்போலோ மற்றும் சடர்ன் வி ராக்கெட் ஆகியவற்றை நேரடியாக கண்டுகளித்தனர். விண்வெளி வீரர்களோடு கலந்துரையாடல், ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றனர்.
மாணவர்கள் இளம் வயதில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றில் அதிக ஈடுபாடுகொள்ள வேண்டும் என்பதைக் அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஆண்டு முதல் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்தோம். மாணவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை, அமெரிக்கா சுற்றுலா செல்ல விசா அனுமதி உள்ளது. எதிர்காலத்தில் உயர்கல்வி கற்க, இவை பெரிதும் உதவும். பள்ளி சார்பில், இனி ஆண்டு தோறும் கல்விச்சுற்றுலாப் பயணம் தொடரும்' என்றார்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு 7 நாட்கள் கல்விச் சுற்றுலா, கடந்த செப்.26 ந் தேதி, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமையில், 2 ஆம் ஆண்டாக பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் 14 பேர் அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு, அங்கு 3 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர், அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ டிஸ்னிலாண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அமெரிக்கா நாசா விண்வெளி மைய கல்விச்சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்து சில தினங்களில் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் கூறியது;
'அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், மாணவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், விண்வெளி சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைகோளை கட்டுப்படுத்தி இயக்குவது எப்படி? அது எப்படி இயக்கப்படுகிறது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள அப்போலோ மற்றும் சடர்ன் வி ராக்கெட் ஆகியவற்றை நேரடியாக கண்டுகளித்தனர். விண்வெளி வீரர்களோடு கலந்துரையாடல், ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றனர்.
மாணவர்கள் இளம் வயதில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றில் அதிக ஈடுபாடுகொள்ள வேண்டும் என்பதைக் அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஆண்டு முதல் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்தோம். மாணவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை, அமெரிக்கா சுற்றுலா செல்ல விசா அனுமதி உள்ளது. எதிர்காலத்தில் உயர்கல்வி கற்க, இவை பெரிதும் உதவும். பள்ளி சார்பில், இனி ஆண்டு தோறும் கல்விச்சுற்றுலாப் பயணம் தொடரும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.