.

Pages

Monday, October 1, 2018

ஜப்பானை 2-வது முறையாக புரட்டிப்போட்ட டிராமி புயல் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 01
ஜப்பானை ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று Typhoon Trami என்ற புயல் தாக்கி கடும் சேதங்களை விளைவித்துள்ளது. இம்முறை தலைநகர் டோக்யோ, ககோஷிமா, ஒஸாகா உள்ளிட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆக. 28 உருவாகி செப். 4 அன்று கரையை கடந்த ஜெபி புயல் (Typhoon Jebi) ஜப்பானின் கன்சாய் நகரை நிலைகுலைய வைத்தது என்றால் நேற்று செப். 30 அன்று வீசிய டிராமி (Trami) எனப் பெயரிடப்பட்ட புயல் கியுஷூ தீவு, ஒகினவா, ஜப்பான் மெயின் லேண்ட், மியாசகி போன்ற பகுதிகளை பதம்பார்த்து சென்றுள்ளது இதனால்...

1. புல்லட் ரயில் சேவைகள் மற்றும் மாலை நேர ரயில் போக்குவரத்துக்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டன.

2. சுமார் 1,100க்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

3. 65க்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4. சுமார் 1.5 மில்லியன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற அறிவுறுத்தப்பட்டனர் எனினும் கட்டாயப்படுத்தப்படவில்லை.

5. சுமார் 5 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

6. தொடர் மழையின் காரணத்தால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மேலும் பலத்த சுழல் காற்றால் மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன.

7. ஒரு பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அறிய வந்துள்ள நிலையில் உடைந்து விழுந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளாலேயே பலர் காயமடைந்துள்ளனர்.

8. இதே செப்டம்பர் மாதத்தில் ஹொகைடோ நகரத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 40 பேர் இறந்தனர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.