தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் 20,318 மாணவ மாணவியர்கள் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 20,336 மாணவ மாணவியர்களுக்கு ரூ.15.07 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள், சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3000 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 30 இலட்சம் திருமண நிதியுதவி தொகை மற்றும் 8 கிராம் வீதம் 24,000 கிராம் தாலிக்கு தங்கம், மகளிர் திட்டம் சார்பில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 196 பயனாளிகளுக்கு ரூ.49 இலட்சம் மானியத்தில் உழைக்கும் மகளிருக்கான இரு சக்கர வாகனங்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சத்து 25 ஆயிரம் ஆதார நிதி, 20 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சத்து 90 ஆயிரம் வங்கி நேரடி கடன் இணைப்பு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.2,50,000 சுழல் நிதி என மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 43,971 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 50 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வேளாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது :-
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி புரிந்து வருகிறார். மேல்நிலை கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், இளம் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம், உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் ஆகிய திட்டங்கள் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களாகும். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் விலையில்லா மடிக்கணினிகள் உள்ளிட்ட பல தொலைநோக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆவார். அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்கள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துகிறேன். என இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.
பின்னர், அரசினர் சுற்றுலா மாளிகையில் வருவாய்த்துறை சார்பில் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவிரியாற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த விஷ்ணு பிரசாத், த.பெ. அனந்தகுமார்), ஸ்ரீநவீன் (த.பெ. கருப்பையா) மணிகண்டன், (த.பெ.சோமு), சிவபாலன் (த.பெ. பாலகிருஷ்ணன்), கதிரவன் (த.பெ.ராமசரி) ஆகிய 5 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், துணை மேயர் மணிகண்டன், நிலவள வங்கித்தலைவர் துரை.வீரணன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஏ.வி.சூரியநாராயணன், கோபிநாத், ஏ.வி.கே.அசோக்குமார், இளங்கோ, முன்னாள் மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், முன்னாள் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணை தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குநர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் சாந்தா, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, சமூக நல அலுவலர் (பொ) பூங்குழலி, வட்டாட்சியர்கள் அருணகிரி, மாணிக்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரிகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வாழ்க வளமுடன்
ReplyDelete