தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை ரூ.123.27 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருப்பதாவது :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள், தென்னை மரங்கள், உயிரிழந்த கால்நடைகள், உயிரிழந்த நபர்கள் ஆகியோருக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
அதன்படி, கஜா புயலினால் உயிரிழந்த 15 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ1,50,00,000 வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிப்பபட்ட 1,16.421 வீடுகளின் குடும்பங்களுக்கு இது வரை 63.00 கோடி நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதர பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கஜா புயலின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள், வல்லம் படகுகள், கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்த மீனவ குடும்பங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரணமாக ரூ.5,000 வீதம் 80446 குடும்பங்களுக்கு ரூ.40.22 கோடி வங்கிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட காரணங்களினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசின் மூலம் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகமும் மாண்புமிகு அமைச்சர்பெருமக்கள் மற்றும் பாராளுமன்றஃசட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது தேதி வரை 32,504 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பெட்டகம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கஜா புயலினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு, நிவாரணமாக வழங்க இரண்டு கட்டமாக ரூ.1.14 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதை வட்ட வாரியாக பிரித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட படகுகள், வல்லம் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளுக்கு ரூ.17.08 கோடி நிவாரண தொகை 3,847 மீனவர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் ஆகியவற்றிற்கு நிவாரணம் வழங்க முதற்கட்டமாக ரூ.165.00 கோடி பெறப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து, நாளது தேதி வரை 237 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.33 இலட்சம் நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரணத் தொகை வரவு வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கீழக்குறச்சி கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சியில் கஜா புயலினால் சேதமடைந்த தென்னந்தோப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (16.12.2018) பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஜஸ்டின், உதவி வேளாண் அலுவலர் நவீன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருப்பதாவது :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள், தென்னை மரங்கள், உயிரிழந்த கால்நடைகள், உயிரிழந்த நபர்கள் ஆகியோருக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
அதன்படி, கஜா புயலினால் உயிரிழந்த 15 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ1,50,00,000 வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிப்பபட்ட 1,16.421 வீடுகளின் குடும்பங்களுக்கு இது வரை 63.00 கோடி நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதர பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கஜா புயலின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள், வல்லம் படகுகள், கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்த மீனவ குடும்பங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரணமாக ரூ.5,000 வீதம் 80446 குடும்பங்களுக்கு ரூ.40.22 கோடி வங்கிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட காரணங்களினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசின் மூலம் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகமும் மாண்புமிகு அமைச்சர்பெருமக்கள் மற்றும் பாராளுமன்றஃசட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது தேதி வரை 32,504 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பெட்டகம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கஜா புயலினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு, நிவாரணமாக வழங்க இரண்டு கட்டமாக ரூ.1.14 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதை வட்ட வாரியாக பிரித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட படகுகள், வல்லம் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளுக்கு ரூ.17.08 கோடி நிவாரண தொகை 3,847 மீனவர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் ஆகியவற்றிற்கு நிவாரணம் வழங்க முதற்கட்டமாக ரூ.165.00 கோடி பெறப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து, நாளது தேதி வரை 237 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.33 இலட்சம் நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரணத் தொகை வரவு வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கீழக்குறச்சி கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சியில் கஜா புயலினால் சேதமடைந்த தென்னந்தோப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (16.12.2018) பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஜஸ்டின், உதவி வேளாண் அலுவலர் நவீன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.