அதிராம்பட்டினம், டிச.16
அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரஷீது கண்டன உரையில்;
'அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக உடனடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
மேலும், அக்கட்சியின் மாநில துணைச் பொதுச்செயலாளர்கள் மண்ணை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில், மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் ஈரோடு ஷாஹின்ஷா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், குவைத் மண்டலச் செயலாளர் முத்துக்காவடி ஹாஜா முகைதீன், பஹ்ரைன் மண்டலச் செயலாளர் வல்லம் ரியாஸ், மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது உள்ளிட்ட அக்கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அக்கட்சியின தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பைசல் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரஷீது கண்டன உரையில்;
'அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக உடனடியாக காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.
மேலும், அக்கட்சியின் மாநில துணைச் பொதுச்செயலாளர்கள் மண்ணை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில், மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் ஈரோடு ஷாஹின்ஷா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், குவைத் மண்டலச் செயலாளர் முத்துக்காவடி ஹாஜா முகைதீன், பஹ்ரைன் மண்டலச் செயலாளர் வல்லம் ரியாஸ், மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது உள்ளிட்ட அக்கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அக்கட்சியின தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பைசல் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.