பட்டுக்கோட்டை, டிச.16
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை விவேகானந்த நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் ~ ஆஷா தம்பதியின் மகள் சம்யுதா (வயது 8). இவர், பட்டுக்கோட்டை நிலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று (டிச.17) ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏஷியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைப்பிலான நிகழ்ச்சியில், தலை முடியில் கையிற்றை கட்டி அதன் மூலம் 990 கிலோ எடை கொண்ட காரை இழுத்துச்சென்று அசத்தினார். 1.46 நிமிடத்தில் 112.2 மீட்டர் தொலைவைக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
இந்த சாதனையை, ஏஷியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகி விவேக் நேரில் பார்வையிட்டு, பதிவு செய்து, புதிய சாதனையாக அறிவித்து, சம்யுதாவுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில்; 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஆசிய அளவில் இதுவே முதல்முறை என்றார்.
சாதனை மாணவி சம்யுதா, பயிற்சியளித்த பயிற்சியாளர் இளையராஜா ஆகியோரை நிகழ்சிக்கு வந்திருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டி வாழ்த்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை விவேகானந்த நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் ~ ஆஷா தம்பதியின் மகள் சம்யுதா (வயது 8). இவர், பட்டுக்கோட்டை நிலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று (டிச.17) ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏஷியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைப்பிலான நிகழ்ச்சியில், தலை முடியில் கையிற்றை கட்டி அதன் மூலம் 990 கிலோ எடை கொண்ட காரை இழுத்துச்சென்று அசத்தினார். 1.46 நிமிடத்தில் 112.2 மீட்டர் தொலைவைக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
இந்த சாதனையை, ஏஷியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நிர்வாகி விவேக் நேரில் பார்வையிட்டு, பதிவு செய்து, புதிய சாதனையாக அறிவித்து, சம்யுதாவுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில்; 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஆசிய அளவில் இதுவே முதல்முறை என்றார்.
சாதனை மாணவி சம்யுதா, பயிற்சியளித்த பயிற்சியாளர் இளையராஜா ஆகியோரை நிகழ்சிக்கு வந்திருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.