.

Pages

Sunday, December 16, 2018

அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் மருத்துவ முகாமில் நிவாரணப் பொருட்கள் வழங்கல் ~ வீடு புனரமைப்பு நிதியளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.16
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், தஞ்சை பான்செக்கர்ஸ் கல்லூரி, அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவை, திருச்சி ஐயா உணவுகள் நிறுவனம், திருச்சி பாத்திமா மருத்துவமனை ஆகியோர் இணைந்து கஜா புயல் பேரிடர் துயர் துடைப்பு இலவச மருத்துவ முகாம், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், கூரை வீடுகள் புனரமைக்கான நிதியளிப்பு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் சாரா திருமண மஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார்.

முகாமில் திருச்சி பாத்திமா மருத்துவமனை  சிறப்பு மருத்துவர் டாக்டர் ரொக்கையா சேக் முகமது தலைமையிலான மகப்பேறு, குழந்தைகள் நலன், பல் மருத்துவர் உட்பட பொதுநல மருத்துவர்கள் மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 1100 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடந்தது.

முன்னதாக, லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.முகமது ரஃபி முகாமை தொடங்கி வைத்து, புயலால் வீடுகளை இழந்த 3 குடும்பங்களுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.

முகாமில் புயலில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூ.200 மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

முகாம் ஏற்பாட்டினை தஞ்சை லயன்ஸ் சங்க இயக்குநர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் செய்திருந்தனர்.

இம்முகாமில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் எம்.அப்துல் ரஹ்மான், எம்.ஏ அப்துல் ஜலீல், ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஹாஜி எம். நெய்னா முகமது, பேராசிரியர் பி. கணபதி, பேராசிரியர் கே. முருகானந்தம், சி.சார்லஸ், டி.பி.கே ராஜேந்திரன், என்.யூ ராமமூர்த்தி, எம். அகமது, எம்.சாகுல்ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, ஆர்.செல்வராஜ், பி.பிச்சை முத்து, எம்.நிஜாமுதீன், மாணிக்க. முத்துசாமி, என். உதயகுமார், முல்லை ஆர்.மதி, நெய்னா முகமது, எம். அபுல் ஹசன் சாதலி, அதிரை மைதீன், எம், அகமது கபீர், வி.ஓம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.